Published : 07 Nov 2021 03:07 AM
Last Updated : 07 Nov 2021 03:07 AM

ஆலந்தூரில் ரூ.1.11 கோடி செலவில் - அங்கன்வாடி மையங்கள், நூலகம் திறப்பு :

ஆலந்தூரில் ரூ.1 கோடியே 11 லட்சம் செலவில் அங்கன்வாடி மையங்கள், நூலகம் ஆகியவற்றை பெரும்புதூர் எம்.பி. டி.ஆர்.பாலு திறந்து வைத்தார்.

ஆலந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்இருந்து ஆலந்தூர் மண்டலத்தில் ரூ.90 லட்சம் செலவில் நங்கநல்லூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதிகளில் 3 குழந்தைகள் அங்கன்வாடி மையங்கள், அதே போல் நந்தம்பாக்கத்தில் ரூ.18 லட்சம் செலவில் நூலகம், ரூ.3 லட்சம் செலவில்குளத்தை பராமரித்து, நடைபாதை ஆகியவற்றை தொடங்கி வைக்கும் விழா நேற்று நடைபெற்றது.

பெரும்புதூர் எம்.பி. டி.ஆர்.பாலு திறந்து வைத்தார். இதில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் சிம்ரன்ஜித் சிங், மண்டல அலுவலர் சீனிவாசன் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x