Published : 07 Nov 2021 03:07 AM
Last Updated : 07 Nov 2021 03:07 AM

தேசிய சிலம்பப் போட்டியில் பங்கேற்ற மாணவிக்கு கிருஷ்ணகிரி டிஎஸ்பி பாராட்டு :

கிருஷ்ணகிரி: தேசிய அளவிலான சிலம்பப் பேட்டியில் பங்கேற்ற மாணவி மதுமலரை, கிருஷ்ணகிரி டிஎஸ்பி பாராட்டினார்.

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி மதுமலர் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றார். இதையடுத்து ராணிப்பேட்டையில் நடைபெற்ற 12-வது தேசிய சிலம்பப் போட்டியில் கலந்துகொண்டார்.

இந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவி, இவர் ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மதுமலருக்கு கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., சரவணன், தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட சிலம்பாட்டக் கழக தலைவி வாசவி, செயலாளர் பவுன்ராஜ், பயிற்சியாளர் சூர்யா, மாணவியின் பெற்றோர் துரை, ராணி மற்றும் மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக செயலாளர் கூறும்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து நிகழாண்டில் தேசிய அளவிலான போட்டியில் மதுமலர் மட்டுமே கலந்து கொண்டார். ஒரு சில புள்ளிகளில் தனது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், தொடர் முயற்சி, பயிற்சி மேற்கொண்டு வரும் பள்ளி மாணவி வெற்றி வாய்ப்பை பெறுவார் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x