Published : 07 Nov 2021 03:07 AM
Last Updated : 07 Nov 2021 03:07 AM

பருவ மழையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளியில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு :

கிருஷ்ணகிரி: வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு செயல்விளக்கப் பயிற்சி நடந்தது.

கிருஷ்ணகிரி தீயணைப்பு மீட்பு பணி நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக பொதுமக்களுக்கு பேரிடர் மீட்பு செயல்விளக்கப் பயிற்சி அவதானப்பட்டி ஏரியில் நேற்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி தீயணைப்பு மீட்புப் பணி நிலைய அலுவலர் மோகன் குமார் தலைமையில் பணியாளர்கள் செய்து காண்பித்தனர்.

ஏரி, ஆறு, குளம், கிணறு மற்றும் அணைகளில் பருவமழையின் போது நீர் நிரம்பி வரும் சூழலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க அவர்களை காப்பாற்றுவதற்காகவும் நீரில் அடித்துச் செல்பவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது தொடர்பான செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் பருவமழை காலத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல் போச்சம்பள்ளி தீயணைப்புத்துறை சார்பில், நிலைய அலுவலர் பிரபாகர், சிறப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் புலியூர் ஏரியில் பேரிடர் மீட்பு செயல்விளக்கப் பயிற்சி செய்து காண்பித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x