Published : 07 Nov 2021 03:08 AM
Last Updated : 07 Nov 2021 03:08 AM
ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட அரசு ஆயுர்வேத மருத்துவர்கள், இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறை மருத்துவர்கள் சார்பில் அரசு ஆயுர்வேத சிறப்பு மருத்துவ முகாம் நாகர்கோவிலை அடுத்துள்ள வீரநாராயணமங்கலத்தில் நடைபெற்றது.
முகாமை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆயுர்வேத மருத்துவர் ஆன்றணி சுரேஷ் தலைமையில் தோல்நோய் நிபுணர் ரனீஷ், மருத்துவர்கள் ஓம்பிரகாஷ், ஜாஸ்மின், இந்திரா, ரோஸ்லின் மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சைஅளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT