Published : 07 Nov 2021 03:08 AM
Last Updated : 07 Nov 2021 03:08 AM

நாகர்கோவிலில் மூதாட்டியிடம் 11 பவுன் நகை பறிப்பு :

நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி அருகே பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் ஆதிதாசன். இவரது மனைவி சரோஜா (67). இவர், மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பெசன்ட்தெரு பகுதியில் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் சரோஜாவின் அருகே நின்றனர். திடீரென ஒருவர் கீழே இறங்கி சரோஜா கழுத்தில் கிடந்த 11 பவுன் செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார்.

சரோஜா சத்தமிடவே அப்பகுதி மக்கள் திரண்டனர். அதற்குள் அந்த நபர்கள் வேகமாக தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து நேசமணிநகர் காவல் நிலையத்தில் சரோஜா புகார் அளித்தார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x