Published : 07 Nov 2021 03:08 AM
Last Updated : 07 Nov 2021 03:08 AM
கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் யாதவர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் அய்யலுராஜ்(45). இவர் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுவெடித்துள்ளார். இதற்கு அவரது எதிர்வீட்டைச் சேர்ந்த லட்சுமணப் பெருமாள் மகன் மகாலிங்கம்(40) எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதில்ஏற்பட்ட பிரச்சினையில் இருதரப்பாக மோதிக்கொண்டனர். மூன்றுபேர் காயமடைந்தனர். இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியல் கைவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT