Published : 01 Nov 2021 03:06 AM
Last Updated : 01 Nov 2021 03:06 AM
தமிழ்நாடு பள்ளி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில்,காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூரில் உள்ள ஈபிஈடி கல்லூரியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்று நிறைவு பெற்றன.
கைப்பந்து, கூடைப்பந்து, கபாடி, வாள் சண்டை, குண்டு எறிதல், தட்டு எறிதல், ஸ்கேட்டிங், கால்பந்து, பந்து வீசுதல், சிலம்பம்,தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளை பள்ளி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் செயலர் ஆர்.அஜித்குமார் தொடங்கி வைத்தார். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு நேற்று பரிசுகள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT