Published : 01 Nov 2021 03:06 AM
Last Updated : 01 Nov 2021 03:06 AM

கிலோ முருங்கை ரூ.38-க்கு விற்பனை :

வெள்ளகோவிலில் இயங்கும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்துக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், முருங்கைக் காயை விற்பனைக்கு கொண்டு வருவர். அவற்றை வியாபாரிகள் வாங்கிச்சென்று கோவை, சென்னை சந்தைகளுக்கு அனுப்பிவைப்பர். அதன்படி நேற்று 8 டன் முருங்கை விற்பனைக்கு வந்தது.

மர முருங்கைக்காய் கிலோரூ.20-க்கும், செடி முருங்கைக்காய் கிலோ ரூ.25-க்கும் விற்பனையானது. கடந்த வாரம் கரும்பு முருங்கைக்காய் ரூ.35-க்கு விற்பனையான நிலையில், நேற்று கிலோவுக்கு ரூ.3 விலை அதிகரித்து ரூ.38-க்கு விற்பனையானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x