Published : 01 Nov 2021 03:06 AM
Last Updated : 01 Nov 2021 03:06 AM
காங்கயம்: காங்கயம், வெள்ளகோவில், அவிநாசிபாளையம், கொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர், ஊதியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், தேங்காய் உலர்களப் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உடைக்கப்பட்டு உலர்த்தப்பட்டுவரும் தேங்காய் பருப்புகளை குவியல், குவியலாக களங்களில் குவித்து வைத்து, தார்பாலின் கொண்டு மூடி வைத்துள்ளனர். தொடர் மழை காரணமாக நேற்றும் பணிகள் பாதிக்கப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT