Published : 01 Nov 2021 03:07 AM
Last Updated : 01 Nov 2021 03:07 AM

தேவைப்படும் ஏழை மாணவர்களுக்கு தருவதற்காக - பயன்படுத்தப்பட்ட மடிக்கணினியை நன்கொடையாக வழங்குங்கள் : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்

பயன்படுத்தப்பட்ட மடிக்கணி னியை நன்கொடையாக பெற்று, தேவைப்படும் ஏழை எளிய மாண வர்களுக்கு வழங்க புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள ஏழை எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மடிக்கணினி அல்லது டேப்லெட் சாதனம் இல்லாமலும், அவற்றை சொந்தமாக வாங்க முடியாமலும் ஆன்லைன் கற்றலை தொடர முடியாமல் இருக்கிறார்கள். கற்றலுக்கு தேவையான டிஜிட்டல் சாதனங்களுக்கு மிகப்பெரிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஐடி நிறுவனங்கள், பிற நிறுவனங்களில் மற்றும் வீடுகளில் ஏராளமான மடிக்கணினி மற்றும் டேப்லெட் கருவிகள் பயன்படுத்தப்பட்டு, புதியமாடல்கள் வந்த உடன் பயன் படுத்திய மடிக்கணினிகள் பயன் படாமல் இருக்கின்றன.

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை புதிய முயற்சியை எடுத்துள்ளார். இதுதொடர் பாக அவர் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பு:

ஐடி நிறுவனங்கள், பிற நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஏழை எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாண வர்களுக்கு வழங்குவதற்காக தாங்கள் பயன்படுத்திய நல்ல நிலையில் உள்ள மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்களை நன்கொடையாக வழங்க வேண்டும்.நன்கொடை வழங்க முன்வருபவர் கள் தங்களது பெயர், முகவரி, தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள், தங்கள் வழங்க விரும்பும் மடிக்கணினிகள், டேப் லெட்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களுடன் துணைநிலை ஆளு நர் அலுவலகத்திற்கு 'lg.pon@nic.in' என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

சிறப்பு பிரிவு

ஆன்லைன் கற்றலுக்காக மடிக்கணினி அல்லது டேப்லெட் தேவைப்படும் ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாண வர்கள் தங்களது கோரிக்கையை, பெயர், முகவரி, தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண், பயிலும் வகுப்பு, பள்ளி கல்லூரியின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் ‘lg.pon@nic.in'என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

அதோடு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகல்லூரியில் இருந்து தேவையானகல்விச் சான்றிதழை பதிவேற்றம்செய்ய வேண்டும். துணைநிலை ஆளுநர் மாளிகையில் இதற்காகசிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள் ளது. ஒருங்கிணைப்பு அதிகாரியாக கண்காணிப்பாளர் காந்தன் நியமிக்கப்பட்டுள்ளார் (தொடர்பு எண் - 90424 09582) என்று தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x