Published : 01 Nov 2021 03:07 AM
Last Updated : 01 Nov 2021 03:07 AM

ரஜினி ரசிகர்கள் தீச்சட்டி ஏந்தி சிறப்பு பூஜை :

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நடிகர் ரஜினிகாந்த் குணமடைய வேண்டி புதுச்சேரியில் ரஜினி ரசிகர்கள் தீச்சட்டி ஏந்தி வழிபட்டனர்.

நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த வியாழக்கிழமை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூன்றாவது நாளாக சிறப்பு வார்டில் வைத்து மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி புதுச்சேரியில் ரஜினி ரசிகர்கள் தீச்சட்டி ஏந்தி வழிபட்டனர். மறைமலை அடிகள் சாலையில் உள்ள அம்மன் கோயிலில் ரஜினிகாந்த் பேனர் வைத்து அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி ரசிகர்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x