Published : 01 Nov 2021 03:07 AM
Last Updated : 01 Nov 2021 03:07 AM

ஓசூரை தனி மாவட்டமாக்க வேண்டும் : அரசுக்கு ஓய்வூதியர்கள் கோரிக்கை :

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க 6-வது மாவட்ட பேரவைக் கூட்டம் ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் ஆர்.துரை தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ஐ.கெம்பண்ணா வரவேற்றார். செயலாளர் தண்டபாணி செயலறிக்கை வாசித்தார். பொருளாளர் ரவிச்சந்திரன் வரவு-செலவு அறிக்கை சமர்பித்தார்.

கூட்டத்தில், அரசுக்கு கரோனா நிதி உதவி அளித்த ஓய்வூதியர்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டன. மேலும், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் நினைவுப் பரிசு, வங்கி மூலம் 15 ஓய்வூதியர்களுக்கு தலா ரூ.2 லட்சம் கடன் ஆணை வழங்கப்பட்டன. கூட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். மருத்துவப்படி ரூ.1,000 வழங்க வேண்டும். ஓசூரை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x