Published : 01 Nov 2021 03:07 AM
Last Updated : 01 Nov 2021 03:07 AM

தருமபுரி கிளை சிறையில் - தற்கொலைக்கு முயன்ற ஆசிரியருக்கு சிகிச்சை :

தருமபுரி கிளை சிறையில் சில்வர் டம்ளரால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற அரசுப் பள்ளி ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி நண்பர் காலனியில் வசிப்பவர் செந்தில்குமார் (37). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் இமிடிநாயக்கனஅள்ளி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மனைவி முத்தமிழ்செல்வி (35). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் காலை கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, மனைவியை செந்தில்குமார் கத்தியால் குத் தினார். இதில், காயமடைந்த முத்தமிழ்செல்வியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த தருமபுரி டவுன் போலீஸார், செந்தில்குமாரை கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று மாலை சிறையில் இருந்த செந்தில்குமார் அங்கிருந்த சில்வர் டம்ளர் மூலம் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.இதில், காயம் அடைந்த அவரை மீட்ட சிறை அதிகாரிகள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x