Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM
சர்தார் வல்லபபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் காரைக்கால் கடற்கரை சாலையில் நேற்று அவரது படத்துக்கு மலர் தூவி, மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகாபட், துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம், முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்று, மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. பின்னர், ஆட்சியர் தலைமையில் அனைவரும் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். சர்தார் வல்லபபாய் படேல் பிறந்தநாளையொட்டி ஏற்கெனவே நடத்தப்பட்டிருந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT