Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM

தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயில் மோதி உயிரிழப்பு :

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பிடிஓ காலனியைச் சேர்ந்தவர் எம்.ரத்தினவேல்(60). திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி, விருப்ப ஓய்வுபெற்றவர். இவர், பாபநாசம்- சுந்தரபெருமாள்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த ஒரு ரயில் மோதியதில், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த கும்பகோணம் ரயில்வே போலீஸார் அங்கு சென்று, ரத்தினவேலின் சடலத்தை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x