Published : 31 Oct 2021 03:09 AM
Last Updated : 31 Oct 2021 03:09 AM
வெள்ளகோவில்: வெள்ளகோவில் வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் பெற்றோரை இழந்த, தாய், தந்தை இருவரில் ஒருவரை இழந்த மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் என 110 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, அந்தந்த பள்ளி ஆசிரியர்களிடம் நிதி உதவி பெற்று, வெள்ளகோவில் வட்டார அரசுப் பள்ளி மாணவர்கள் நல அமைப்பும், ஐ.என்.எப்.ஏ. அமைப்பும் இணைந்து உதவிகள் செய்து வருகிறது. அந்த வகையில் ஆசிரியர்கள், சமூக மற்றும் கல்வி ஆர்வலர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் நலவிரும்பிகள், மருத்துவர்கள், சங்க நிர்வாகிகள் ஆகியோரின் பங்களிப்பில் தீபாவளி புத்தாடைகள் வழங்கப்பட்டன. முத்தூர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 27 பள்ளிகளை சேர்ந்த 110 குழந்தைகளுக்கு வழங்குவதற்காக அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களிடம் புத்தாடைகள் ஒப்படைக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT