Published : 31 Oct 2021 03:09 AM
Last Updated : 31 Oct 2021 03:09 AM

இடிந்து விழும் நிலையில் அரசுப்பள்ளி கட்டிடம் : சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

மடத்துக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பான்குளம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் பாப்பான்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். நாளை (நவ.1) முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பாப்பான்குளம் அரசுப்பள்ளியில் உள்ள 3 கட்டிடங்களும் பழுதடைந்த நிலையில் உள்ளன. சமையல் அறை, சுற்றுச்சுவர் எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரைகளில் கான்கிரீட் பெயர்ந்து காணப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது ‘‘பாப்பான்குளம் அரசுப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்கள் இதுவரை சீரமைக்கப்படவில்லை. பராமரிப்பில்லாத கழிப்பிடம் மற்றும் குடிநீர் தொட்டி என பள்ளியில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத நிலையில், இப்பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு அச்சமாக உள்ளது. எனவே அதிகாரிகள், பள்ளியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x