Published : 31 Oct 2021 03:09 AM
Last Updated : 31 Oct 2021 03:09 AM
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தருமபுரி நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
தருமபுரி நகராட்சியில் 123 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தீபாவளியை யொட்டி நகராட்சி அலுவலகத்தில் சீருடை, சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் சித்ரா, தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT