Published : 31 Oct 2021 03:10 AM
Last Updated : 31 Oct 2021 03:10 AM
மாங்காடு அருகே மவுலிவாக்கம், சுலக்சனா நகர் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் அசோக்(23), இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவுகடையை மூடிச் சென்றார்.
பின்னர் நேற்று காலை கடையில் வேலை செய்யும் நபர்கள்கடையை திறக்க வந்தபோதுகடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்து. உள்ளே சென்று பார்த்தபோது சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்கள் மற்றும் மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாங்காடு போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT