Published : 31 Oct 2021 03:11 AM
Last Updated : 31 Oct 2021 03:11 AM

காட்டுபாவா பள்ளிவாசலில் : நவ.6-ல் சந்தனக்கூடு கொடியேற்றம் :

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா நவ.6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதுதொடர்பாக திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பிரவீனா மேரி தலைமையில் நேற்று முன்தினம் இரவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஜமாத் தலைவர் பக்ருதீன், செயலாளர் இப்ராகிம்ஷா மற்றும் வருவாய்த் துறையினர், போலீஸார் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் வட்டாட்சியர் பிரவீனா மேரி கூறியது: காட்டுபாவா பள்ளி வாசல் சந்தனக்கூடு விழாவையொட்டி நவ.6-ம் தேதி நடைபெறும் கொடியேற்று நிகழ்ச்சியை மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டும். தர்ஹாவைச் சுற்றிலும் கடைகள் அமைக்க அனுமதி இல்லை. அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே தர்ஹாவுக்குள் செல்ல வேண்டும். 2 வாணவெடிகள் மட்டுமே வெடிக்க வேண்டும். இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x