Published : 31 Oct 2021 03:11 AM
Last Updated : 31 Oct 2021 03:11 AM

கைது செய்யப்பட்ட அரசு மருத்துவரை - பணி நீக்கம் செய்ய மக்கள் வலியுறுத்தல் :

இளையரசனேந்தலில் கைது செய்யப்பட்ட அரசு மருத்துவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என, கிராம மக்கள் கோரினர்.

கோவில்பட்டி இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்புக் குழு தலைவர் முருகன், தேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் ரெங்கநாயகலு உள்ளிட்டோர், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்த குருசாமி, பெண் மருத்துவப் பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டார்.

ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும், தரமாகவும் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மத்தியில், இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்ட மருத்துவர் குருசாமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும், என தெரிவித்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x