Published : 24 Oct 2021 03:06 AM
Last Updated : 24 Oct 2021 03:06 AM
வெள்ளகோவிலை அடுத்த முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடைபெற்றது. முத்தூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 30 பேர், 5,459 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
முதல் தரம் ஒரு கிலோ ரூ.30.80-க்கும், இரண்டாம் தரம் ரூ.26.15-க்கும், சராசரியாக ரூ.30.20-க்கும் ஏலம் போனது. மொத்தம் 2 டன் தேங்காய்கள் ரூ.59 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
இதேபோல, கொப்பரை ஏலத்தில் 1,502 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.100.30-க்கும், குறைந்தபட்சமாக ரூ.75.75-க்கும் ஏலம் போனது. மொத்தம் 1502 கிலோ கொப்பரை, ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்துக்கு ஏலம் போனது. 34 விவசாயிகள் பங்கேற்றனர் என, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரங்கன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT