Published : 24 Oct 2021 03:06 AM
Last Updated : 24 Oct 2021 03:06 AM

மூதாட்டியின் காதை அறுத்து நகை பறிப்பு :

திருப்பூர்: அவிநாசி ராயம்பாளையம் அய்யன்தோட்டத்தை சேர்ந்தவர் பழனாத்தாள்(72). இவர் நேற்று முன்தினம் மாலை மாடு மேய்த்துவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், பழனாத்தாளை கீழே தள்ளி விட்டு இரு காதுகளையும் கூர்மையான ஆயுதத்தால் அறுத்து, அவர் அணிந்திருந்த ஒரு பவுன் கம்மல்களை பறித்துக் கொண்டு தப்பியோடியுனார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், பழனாத்தாளை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x