Published : 24 Oct 2021 03:07 AM
Last Updated : 24 Oct 2021 03:07 AM

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட - கிரிக்கெட் பயிற்சியாளர் கைது :

புதுச்சேரி துத்திப்பட்டில் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான மைதா னங்கள் மூடப்பட்டபோது, முத்த ரையர்பாளையத்தில் உள்ள இளங்கோவடிகள் அரசுப் பள்ளி மைதா னத்தில் வீரர், வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது பயிற்சியாளர் தாமரைக் கண்ணன், தனியார் பள்ளியில் 12-ம்வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் செய்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை.

இதுகுறித்து அச்சிறுமி புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் செய்தார். அவர்கள் விசா ரணை நடத்திய நிலையில் இதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நலக்குழுவின் தலைவர் சிவசாமி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன், மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்க தலைவர் தாமோதரன் (திரைப்பட இயக்குநர் ஷங்கரின் சம்மந்தி), அவரது மகன் ரோஹித், இணை செயலாளர் வெங்கட் ஆகிய 5 பேர் மீதும் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில் தாமரைக்கண் ணன் பத்துக்கண்ணு பகுதியில்பதுங்கி இருப்பதாக மேட்டுப் பாளையம் போலீஸாருக்கு தகவல்கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் உறவினர் வீட்டில்பதுங்கியிருந்த தாமரைக்கண் ணனை கைது செய்து நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து தலைமைறைவாக உள்ள திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன் ரோஹித், சம்மந்தி தாமோதரன் உள்ளிட்ட 4 பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x