Published : 24 Oct 2021 03:08 AM
Last Updated : 24 Oct 2021 03:08 AM

290 தனியார் பள்ளி வாகனங்கள் ஊத்தங்கரையில் நேற்று ஆய்வு :

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் இயங்கும் 290 பேருந்துகள், மினி பேருந்து உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். அதில், பள்ளி வாகன விதியின்படி, அனைத்து வாகனங்களிலும் அவசர வழி தீயணைப்பு கருவி மற்றும் வாகனங்களின் நிலை குறித்து ஆய்வு செய்தனர். வாகனங்களை இயக்கும் போது ஓட்டுநர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அலுவலர்கள் அறிவுறுத்தினர். ஆய்வின்போது கண்டறியப்பட்ட குறைகளை சரி செய்த பிறகு, பள்ளி வாகனங்களை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சாமி, ஊத்தங்கரை டிஎஸ்பி அலெக்சாண்டர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், அன்புசெழியன், கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x