Published : 24 Oct 2021 03:08 AM
Last Updated : 24 Oct 2021 03:08 AM

சமத்துவபுரம் அமையவுள்ள பகுதியில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் நேரில் ஆய்வு :

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் வகுத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாவட்ட கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநருமான மருத்துவர் வைத்திநாதன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

முன்னதாக, கடத்தூர் ஒன்றியம் சிந்தல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்த கரோனா தடுப்பூசி மாபெரும் சிறப்பு முகாமை நேரில் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ரங்கநாதன், உதவி பொறியாளர் சண்முகம் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x