Published : 24 Oct 2021 03:08 AM
Last Updated : 24 Oct 2021 03:08 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி 3-வது மைல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மற்றும் காவலர் களுக்கான மனஅழுத்த மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் அழகர் செந்தில் பயிற்சி அளித்தார். தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பளார் இளங்கோவன், மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT