Published : 24 Oct 2021 03:08 AM
Last Updated : 24 Oct 2021 03:08 AM

பட்டா திருத்த சிறப்பு முகாம் :

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே ஜமீன்தேவர்குளம், கே.வெங்க டேஷ்வரபுரம் கிராமங்களில் பட்டா பெயர் மாற்றத்துக்கான சிறப்பு முகாம் நடந்தது. கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா, துணை வட்டாட்சியர் செல்வகுமார், வட்ட வழங்கல் அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். கயத்தாறு வட்டம் தெற்கு கழுகுமலை, கத்தாளம்பட்டி, கரடிகுளம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற பட்டா திருத்த முகாமில் 72 பேர் பட்டா மாற்றம் கேட்டும், 20 பேர் உதவி தொகை கேட்டும் மனு அளித்தனர். வட்டாட்சியர் பேச்சிமுத்து, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ராமசுப்பு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x