Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM
நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி எஸ்ஐ சத்தியசோபன் தலைமையில் போலீஸார் வடசேரி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்றுக்கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர் கோதைகிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்(41) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார் 60 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT