Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு :

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை பெய்த நிலையில், தற்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,145 கனஅடியும், பெருஞ்சாணி அணைக்கு 781 கனஅடியும், சிற்றாறு இரண்டில் 58 கனஅடியும், பொய்கையில் 28 கனஅடியும் என, அணைகளுக்கு மொத்தம் 2,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வருகிறது. பேச்சிப்பாறை நீர்மட்டம் 43.24 அடியாக உள்ள நிலையில், 1,602 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.79 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 800 கனஅடி வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நேற்று வெயில் இன்றி மேகமூட்டத்துடன் குளிரான தட்பவெப்பம் நிலவியது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x