Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM
ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமண் புனித வளன் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் இயக்கம், சாலைப்பாதுகாப்பு படை, லசால் இளைஞர் இயக்கம் ஆகியவை சார்பில் விழிப்புணர்வு விழா நடைபெற்றது.
கீழமுடிமண் ஊராட்சி மன்றத்தலைவி ப்ரியா செல்வக்குமார் தலைமை வகித்தார். மாணவி கோமதி வரவேற்றார். மரம்வளர்த்தல், நெகிழி தவிர்த்தல்,கரோனா தற்காப்பு நடவடிக்கைகள், இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறத் தூய்மை போன்ற மையக்கருத்துகளின் அடிப்படையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, விழிப்புணர்வுப் பதாகை மற்றும் முழக்கங்களுடன் கீழமுடிமண் கிராமத்தில் மாணவர்கள் பங்கேற்ற சமூக நலனுக்கான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
பள்ளித்தாளாளர் அருட்சகோதரர் அன்புநாதன், தலைமையாசிரியர் அருட்சகோதரர் விக்டர் ஆகியோர் மாணவர்களைப் பாராட்டினர். விழா ஏற்பாடுகளை ஆசிரியை பாக்யராணி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT