Published : 22 Oct 2021 03:07 AM
Last Updated : 22 Oct 2021 03:07 AM
கோவில்பட்டியில் நேற்று பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீர், சாக்கடை கழிவு நீருடன் பெருக்கெடுத்து ஓடியது.
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. மதியம் 2 மணிக்கு மேல் வானில்மேகங்கள் திரண்டன. மாலை 4 மணிக்கு மேல் பலத்த மழைபெய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த மழையால் கோவில்பட்டி பிரதான சாலை, மாதாங்கோயில் சாலை, மந்தித்தோப்பு சாலை, புதுரோடு விலக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.பிரதான சாலையோரம் உள்ள ஓடையில் இருந்த சாக்கடை கழிவுநீர் மழை நீரோடு கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஓடையின் மீது இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட பின்னர், ஓடையை தூர்வார வேண்டும் என பலரும்கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை ஓடை தூர்வாரப்படாததால், மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுப்பது வழக்கமாகிவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT