Published : 20 Oct 2021 03:09 AM
Last Updated : 20 Oct 2021 03:09 AM

எக்ஸ்பி 95 ரக பெட்ரோலை சந்தைப்படுத்த - இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘தினந்தோறும் தீபாவளி’ : புதுவை வாடிக்கையாளர்கள் பங்கேற்று பயனடையலாம்

இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம்அறிமுகம் செய்துள்ள கூடுதல் திறனுடன்கூடிய எக்ஸ்பி 95 பெட்ரோலை சந்தைப் படுத்த, வாடிக்கையாளர்களிடையே ‘தினந்தோறும் தீபாவளி’ திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

வாகனங்களுக்கான கூடுதல் திறனுடன் கூடிய எரிபொருளை இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த மே மாதம் எக்ஸ்பி 95 (XP95 - ஆக்டேன் பெட்ரோல்) என்ற பெயரில் சந்தைப்படுத்தியது.

இதை நுகர்வோர் அறியச் செய்யும் வகையில், புதுச்சேரி விநியோகஸ்தர்கள் எக்ஸ்பி 95-க்கான பிரத்யேக பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். பிரச்சாரத்தை ஊக்குவிக்க, இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் ரேடியோ ஜிங்கிள்களை உருவாக்கி வருகின்றனர்.

இதற்கிடையே, புதுச்சேரி சந்திரா ஏஜென்ஸி பெட்ரோல் விற்பனை நிலையத்தில் எக்ஸ்பி 95 எரிபொருள் விற்பனையை அதிகரிக்கும் வகையில், ‘தினந்தோறும் தீபாவளி’ என்ற பிரச்சாரத் திட்டத்தை இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்திற்கான தலைவர் காந்த் மாதவ் வைத்யா தொடங்கி வைத்தார்.

இதற்கான தொடக்க நிகழ்வில், இந்தியன் ஆயில் தமிழ்நாடு நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் பி. ஜெயதேவன் மற்றும் தமிழ்நாடு பொது மேலாளர் (சில்லரை விற்பனை) குமரவேல், திருச்சி பிரிவு அதிகாரிகள் மற்றும் டீலர்கள் வாடிக்கையாளர்கள் குழுவுடன் கலந்து கொண்டனர்.

இந்த பிரச்சாரத்தில் வாடிக்கையா ளர்கள் பங்கேற்று, தங்கள் ஆலோச னைகளை அளிக்கலாம். வெற்றி பெறுவோருக்கு சிறப்பு பரிசுகள் உண்டு. பிரச்சாரப் போட்டியில் பங்கேற்போர், அளிக்கும் சிறந்த ஆலோசனையின் பேரில் இந்த வெற்றியாளர்கள் தேர்ந் தெடுக்கப்படுவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் கடந்த 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 30-ம் தேதி வரை நாள்தோறும் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

ரூ. 200 செலுத்தி எக்ஸ்பி 95 பெட்ரோல் பெறும் இருசக்கர வாகன ஓட்டிகள், ரூ. 1,000 செலுத்தும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இந்தப் போட்டியில் பங்கேற்க தகுதியுடையவர்கள்.

கூடுதல் விவரங்களுக்கு குறிப்பிட்ட ஏஜென்ஸியை அணுகலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x