Published : 20 Oct 2021 03:10 AM
Last Updated : 20 Oct 2021 03:10 AM
கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றம் மற்றும் மனையியல் மன்றம் சார்பில், உலக உணவு தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியை ரூத் ரத்தினகுமாரி தலைமை வகித்தார். ஆசிரியை உஷா ஜோஸ்பின், உதவி தலைமையாசிரியர் கண்ணன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கயத்தாறு வட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்ட அலுவலர் தாஜ் நிஷா பேகம், கண்காணிப்பாளர் தாமரைசெல்வி, பள்ளியின் நுகர்வோர் மன்ற செயலாளர் ஜெயமீனா ஆகியோர் பேசினர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை அமலபுஷ்பம் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT