Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM
திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே உள்ள கடைக்கு நேற்று முன்தினம் சென்ற 5 இளைஞர்கள், அங்குள்ள பெண்ணிடம் தகாத வார்த்தைகளை கூறி பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை கடையில் இருந்த சுரேஷ் என்பவர் தட்டி கேட்டதோடு பக்கத்து கடைக்காரர்களிடம் தகவல் தெரிவிக்க முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அக்கும்பலில் இருந்து ஒருவர் சுரேஷை கத்தியால் தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் அவர்கள் தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸார், காயமடைந்த நபரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து, இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகரைச் சேர்ந்த ராகேஷ்(24), அஜித்பாபு(22), பெரிய இரும்பேடு பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன்(20) ஆகியோரை கைது செய்தனர். மேலும், இருவரைத் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT