Published : 18 Oct 2021 03:12 AM
Last Updated : 18 Oct 2021 03:12 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகேயுள்ள வளம்பக்குடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(52), விவசாயி. இவரது மனைவி ராசாத்தி(44). இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் வீட்டில் இருந்த நிலையில், இவர்களின் மகன் பாரதி வெளியே சென்றுவிட்டு, இரவில் வீடு திரும்பினார். அப்போது, கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்த நிலையில், நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து, அவர் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, தாய் ராசாத்தி முகத்தில் காயங்களுடன் இறந்துகிடந்தார். அதேபோல, தந்தை கிருஷ்ணமூர்த்தி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த செங்கிப்பட்டி போலீஸார் அங்கு சென்று, சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ராசாத்தியை கொலை செய்துவிட்டு, கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT