Published : 18 Oct 2021 03:12 AM
Last Updated : 18 Oct 2021 03:12 AM

அனுமதி பெறாமல் ராஜராஜசோழன் சிலை; அடிக்கல் நாட்ட முயன்ற 19 பேர் கைது :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை புறவழிச்சாலைப் பகுதியில் மாமன்னன் ராஜராஜசோழனுக்கு 150 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட உள்ளதாக மாமன்னர் ராஜராஜசோழன் திருமேனி அமைப்புக் குழு அறிவித்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், இந்தச் சிலை அமைக்க முறையாக யாரிடமும் அனுமதி வாங்கவில்லை என்றும், சிலை அமைக்கப்படவுள்ள இடம் வயல் என்பதால், 150 அடி உயரத்துக்கு அமைக்கப்படும்போது, அதன் உறுதித்தன்மைக் கேள்விக்குறியாவதாகவும் கூறி காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். மேலும், நிகழ்விடத்தில் அமைக்கப்பட்ட பந்தல், நுழைவுவாயில் வளைவு பலகை உள்ளிட்டவை அகற்றப்பட்டன. இந்நிலையில், நேற்று அடிக்கல் நாட்டுவதற்காக நிகழ்விடத்துக்கு வந்த மாமன்னர் ராஜராஜசோழன் திருமேனி அமைப்புக் குழு நிர்வாக அறங்காவலர் பழ.சந்தோஷ்குமார் உட்பட 19 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x