Published : 18 Oct 2021 03:12 AM
Last Updated : 18 Oct 2021 03:12 AM
காரைக்கால்: காரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்குச் செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இங்கு சாலையோர மின்விளக்குகள் இல்லை. சாலைகளில் மழைநீர் தேங்குகிறது என பல்வேறு புகார்களை தெரிவித்து வரும் மீனவர்கள், அரசலாறு முகத்துவாரத்தை தூர் வார வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் புதுச்சேரி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர், மீனவர்களிடம் அமைச்சர் கூறியது: தற்போது மழைக்காலமாக இருப்பதால், துறைமுக சாலைகளை சீரமைக்கும் பணிகளை ஜனவரியில் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். மேலும், அரசலாறு முகத்துவாரத்தை தூர் வாருவது குறித்து பொதுப்பணித் துறை, மீன்வளத் துறை அமைச்சர்களிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT