Published : 18 Oct 2021 03:13 AM
Last Updated : 18 Oct 2021 03:13 AM

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் - ஐப்பசி திருவிழா நாட்கால் நடும் நிகழ்ச்சி :

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நேற்று நாட்கால் நடும் விழா நடந்தது.

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசு வாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அக்.21-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று கோயில் முன்பு நாட்கால் நடும் விழா நடந்தது. விழாவில், கோயில் நிர்வாக அலுவலர் நாகராஜன் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, 21-ம் தேதி அம்பாள் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படுகிறது. கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்தாண்டும் 9-ம் நாளான 29-ம் தேதி தேரோட்டம் நடைபெறாது. அதேபோல், நவ.1-ம் தேதி நடைபெறும் திருக்கல்யாண வைபவமும் அரசின் வழிகாட்டுதல்படி நடைபெறும் என கூறப்படுகிறது.

திருவிழா காலங்களில் காலையில் நடைபெறும் வீதி உலா இந்தாண்டு நடைபெறாது. மாலையில் சுவாமி, அம்பாள் கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x