Published : 18 Oct 2021 03:13 AM
Last Updated : 18 Oct 2021 03:13 AM

ஆதிபராசக்தி மன்றத்தில் முப்பெரும் விழா :

கோவில்பட்டி

கோவில்பட்டி புதுக்கிராமம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் பங்காரு அடிகளாரின் 81-வது அவதார திருவிழா, ஆடிப்பூர பெருவிழா மற்றும் மன்றத்தின் 15-வது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவின் தொடக்கமாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பொன்னுச்சாமி மன்றத்தின் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடந்த விழாவுக்கு மாரிக்கண்ணன், கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். தெற்கு மண்டல தலைவர் டி.பிரபாகரன் வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் என்.முத்துராஜ், ஏ.சண்முகவேல் மற்றும் ஜி.எம்.சிங்கராஜ், சங்கரன் ஆகியோர் முளைப்பாரி மற்றும் கஞ்சிகலய ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஏற்பாடுகளை மன்ற தலைவர் எஸ்.செந்தில்குமார், எஸ்.சொர்ணலட்சுமி செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x