Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM
புதுவை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக புதுவை நகர அமப்பு குழுமத்திடம் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட நகராட்சிக்கு ரூ.2.5 லட்சம் உரிமத்தொகை செலுத்த வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் இத்தொகையைத் செலுத்தவில்லை. உரிமத்தொகை செலுத்தும்படி நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை. இந்நிலையில் புதுவை நகராட்சி நிர்வாகம் உரிமத்தொகை செலுத்தாத செல்போன் டவர்களின் இணைப்பை துண்டித்து சீல் வைக்கும் பணியில் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, முருங்கப்பாக்கம், முதலியார்பேட்டை பகுதிகளில் 5 செல்போன் டவர்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. உரிமத்தொகை செலுத்தாவிட்டால் இந்த நடவடிக்கை தொடரும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT