Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM
திருப்பூர்: அவிநாசி அடுத்த சேவூர் அருகே பந்தம்பாளையம் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த வட மாநில இளைஞரை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர், 83 கிலோ 600 கிராம் எடை கொண்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கடத்திச் செல்வது தெரியவந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சேட்டன் சிங் (23) என்பதும், சேவூர் ஏரிமேட்டில் தேவராஜ் என்பவரது தோட்டத்தில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சேவூர் போலீஸார் வழக்கு பதிந்து, சேட்டன் சிங்கை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT