Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

கோட்டாட்சியரிடம் பாஜக புகார் மனு :

கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கர நாராயணனிடம் பாஜக மாவட்டச் செயலாளர் வி.வேல்ராஜா, மாவட்ட இளைஞரணி தலைவர் எம்.பி.காளிதாசன் உள்ளிட்டோர் வழங்கிய மனு விவரம்: கோவில்பட்டியில் வருவாய் ஆய்வாளர், பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் பல்வேறு விண்ணப்பங்கள் மீது முறையாக விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல், தன்னை நேரில் வந்து சந்தித்து, கொடிநாள் நிதி வழங்க வேண்டும் என்று கூறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுமக்களை அலைக்கழிக்கக்கூடாது என்ற உயரிய நோக்கில் அரசு கொண்டு வந்த ஆன்லைன் சேவை திட்டத்தை கேலிக்கூத்தாக்குவது வேதனை தருகிறது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x