Published : 09 Oct 2021 03:11 AM
Last Updated : 09 Oct 2021 03:11 AM

கூடலூரில் வாகன தணிக்கையின்போது : 15 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் சிக்கினர் :

கூடலூர்: தேனி மாவட்டம், கூடலூர் வடக்கு எஸ்ஐ பாலசுப்ரமணியன் தலைமையிலான போலீஸார் ஆங்கூர்பாளையம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூடலூர் மந்தையம்மன் கோயில் தெரு செல்வம்(37), சிவகாமன்(35) ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். அவர்களிடம் சோதனையிட்டதில் 15 கிலோ கஞ்சா மற்றும் ரூ.25,500 இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் கம்பம் இளையேந்திரன் (41) என்பவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கஞ்சா, மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x