Published : 06 Oct 2021 03:14 AM
Last Updated : 06 Oct 2021 03:14 AM

‘வார இறுதி நாட்களில் கோயில்கள் திறக்கப்படும்’ :

சென்னை: இராமலிங்க அடிகளாரின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை, ஏழு கிணறு பகுதியில் உள்ள இராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லத்தில் அவரது படத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது,‘‘மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியே கோயில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

எனவே, வார இறுதி நாட்களிலும் கோயில்களை திறக்கக் கோரி பாஜக போராட்டம் நடத்துவது தேவையற்றது. இந்த நிலை ஆண்டு முழுவதும் தொடராது. கரோனாவால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நிலை வந்தவுடன் கோயில்கள் திறக்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x