Published : 01 Oct 2021 03:19 AM
Last Updated : 01 Oct 2021 03:19 AM

தேனி மாவட்டத்தில் இன்று முதல் 18-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு :

தேனி மாவட்டம், உத்தமபாளையம் மற்றும் போடி வட்டத்தில் உள்ள 18-ம் நீட்டிப்பு கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு பெரியாறு அணையிலிருந்து இன்று (அக்.1) முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வினாடிக்கு 95 கனஅடி வீதம் 121 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன் மூலம் உத்தமபாளையம், போடி ஆகிய வட்டங்களில் உள்ள 4,794 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x