Published : 26 Sep 2021 03:27 AM
Last Updated : 26 Sep 2021 03:27 AM
காட்பாடி: வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங் களாக நடைபெற உள்ளது. இதையடுத்து, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, காட்பாடி கிறிஸ்டியன்பேட்டை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் காவல்துறையினர் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து வேலூர் நோக்கி வந்த காரில் ரூ.26 லட்சத்து 22 ஆயிரத்து 700 பணம் இருந்தது. இந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்து தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT