Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM

தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது :

கோவை

கோவை மாநகரில் இருசக்கர வாகனங்களை திருடும் நபர்களை பிடிக்க, காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் உத்தரவின் பேரில், மாநகர் வடக்கு துணை ஆணையர் டி.ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், ஆர்.எஸ்.புரம் விசாரணைப் பிரிவு காவல் ஆய்வாளர் பரிமளாதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தியதில், தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டது செல்வபுரம் பொன்னி தோட்டம் சந்து பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற அசாருதீன்(27), குனியமுத்தூர் முத்து மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தமுகமது சாதிக்(24), ஒண்டிப்புதூர் வி.ஐ.பி நகரைச் சேர்ந்த கார்த்திக் என்ற ரஞ்சித்குமார்(26) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x