Published : 25 Sep 2021 03:34 AM
Last Updated : 25 Sep 2021 03:34 AM

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது : 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு :

ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் 27-வது கொண்டை ஊசி வளைவில் லாரி பழுதடைந்ததால், தமிழகம் - கர்நாடக மாநிலம் இடையே ஆறு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகம் - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்தப்பாதையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மைசூருக்கு சர்க்கரை பாரம் ஏற்றி வந்த லாரி, நேற்று காலை பழுதானது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல், இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், பழுதடைந்த லாரியை அகற்றி, இலகு ரக வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். மாலையில் லாரியின் பழுது நீக்கப்பட்டு, போக்குவரத்து சீரானது. லாரி பழுது காரணமாக இந்த சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x