Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM
ஈரோடு: தாளவாடி தோட்டப்பகுதியில் சிறுத்தை நடமாடியது கண்காணிப்புக் கேமராவில் பதிவானதையடுத்து, அப்பகுதியில் கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர் பகுதியில் கடந்த 2 மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில் உள்ள ஆடு, மாடு, காவல் நாய்களை சிறுத்தை கொன்று வருவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆடு, மாடுகளை வேட்டையாடும் சிறுத்தை, அப்பகுதியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கல்குவாரியில் பதுங்கிக் கொள்வதாகக் கூறப்படுகிறது.
சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தும், இதுவரை சிக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தொட்டகாஜனூர் கிராமத்தில் உள்ள ரமேஷ் என்பவரது தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடந்து செல்லும் காட்சி பதிவானது. தோட்டத்திற்கு வந்த சிறுத்தை நாய்கள் சத்தம் கேட்டு, மீண்டும் திரும்பி ஓடும் காட்சி கேமராவில் பதிவாகி உள்ளது.
மேலும் அங்கிருந்து வெளியே வந்த சிறுத்தை முருகேஷ் என்பவரது தோட்டம் வழியாக நடந்து செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இதையடுத்து இப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT